வெள்ளி, 18 ஜனவரி, 2013

உன் நினைவின் சுவடுகள்

 
மண்ணின் உன் நினைவின் சுவடுகள்
மனதைக் கீறீக் கிளிக்குதே...
தீயை வளர்க்கும் இரவுகள்
தண்ணீரில் மூழ்க வேண்டுதே...!

கடலுக்குள்ளே உனது குரல் கேட்டு
கரையில் நின்ற கண்கள் நனையுதே
இதயத்துக்குள்ளே இரு பெயரெழுதி
இருதியில் உன்னைக் காணாமல் அலையுதே...!
 
திசைகள் தடுமாறித் தேடினேன்
தேவன் உன் மார்புக்குள் புதையவே
தசைகள் ஆடி நான் ஓடினேன்
ஜீவன் உன்னுயிரை மீட்க்கவே...!
 
மீன்கள் விளையும் வயலிலே
மீனவன் உன்னை மூழுங்குமா...?
கண்ணீரில் கதறிக் கேட்கிறேன்
கருணை காட்டு கடல் தாயம்மா...!
 
 
-இளங்கவித்தென்றல் சானியா-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Template by:

Free Blog Templates